الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

88

1تسبيحة مزمور لبني قورح. لامام المغنين على العود للغناء‎. ‎قصيدة لهيمان الازراحي‎. ‎يا رب اله خلاصي بالنهار والليل صرخت امامك‎.
1என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2‎فلتأت قدامك صلاتي. امل اذنك الى صراخي‎.
2என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
3‎لانه قد شبعت من المصائب نفسي وحياتي الى الهاوية دنت‎.
3என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.
4‎حسبت مثل المنحدرين الى الجب. صرت كرجل لا قوة له‎.
4நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப்போலானேன்.
5‎بين الاموات فراشي مثل القتلى المضطجعين في القبر الذين لا تذكرهم بعد وهم من يدك انقطعوا‎.
5மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன்.
6‎وضعتني في الجب الاسفل في ظلمات في اعماق‎.
6என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர்.
7‎عليّ استقر غضبك وبكل تياراتك ذللتني. سلاه‎.
7உம்முடைய கோபம் என்னை இருத்துகிறது; உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா)
8‎ابعدت عني معارفي. جعلتني رجسا لهم. اغلق عليّ فما اخرج‎.
8எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; நான் வெளியே புறப்படக்கூடாதபடி அடைபட்டிருக்கிறேன்.
9‎عيني ذابت من الذل. دعوتك يا رب كل يومً. بسطت اليك يدي
9துக்கத்தினால் என் கண் தொய்ந்துபோயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்.
10أفلعلك للاموات تصنع عجائب أم الاخيلة تقوم تمجدك. سلاه‎.
10மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா)
11‎هل يحدث في القبر برحمتك او بحقك في الهلاك‎.
11பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
12‎هل تعرف في الظلمة عجائبك وبرك في ارض النسيان
12இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ?
13اما انا فاليك يا رب صرخت وفي الغداة صلاتي تتقدمك‎.
13நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.
14‎لماذا يا رب ترفض نفسي. لماذا تحجب وجهك عني‎.
14கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?
15‎انا مسكين ومسلم الروح منذ صباي. احتملت اهوالك. تحيرت‎.
15சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.
16‎عليّ عبر سخطك. اهوالك اهلكتني‎.
16உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடைய பயங்கரங்கள் என்னை அதம்பண்ணுகிறது.
17‎احاطت بي كالمياه اليوم كله. اكتنفتني معا‎.
17அவைகள் நாடோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, ஏகமாய் என்னை வளைந்து கொள்ளுகிறது.
18‎ابعدت عني محبا وصاحبا. معارفي في الظلمة
18சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.