الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

96

1رنموا للرب ترنيمة جديدة رنمي للرب يا كل الارض‎.
1கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.
2‎رنموا للرب باركوا اسمه بشروا من يوم الى يوم بخلاصه‎.
2கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
3‎حدثوا بين الامم بمجده بين جميع الشعوب بعجائبه‎.
3ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
4‎لان الرب عظيم وحميد جدا مهوب هو على كل الآلهة‎.
4கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
5‎لان كل آلهة الشعوب اصنام اما الرب فقد صنع السموات‎.
5சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
6‎مجد وجلال قدامه. العزّ والجمال في مقدسه
6மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
7قدموا للرب يا قبائل الشعوب قدموا للرب مجدا وقوة‎.
7ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
8‎قدموا للرب مجد اسمه. هاتوا تقدمة وادخلوا دياره‎.
8கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.
9‎اسجدوا للرب في زينة مقدسة. ارتعدي قدامه يا كل الارض‎.
9பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.
10‎قولوا بين الامم الرب قد ملك. ايضا تثبتت المسكونة فلا تتزعزع. يدين الشعوب بالاستقامة‎.
10கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும் அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.
11‎لتفرح السموات ولتبتهج الارض ليعج البحر وملؤه
11வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.
12ليجذل الحقل وكل ما فيه لتترنم حينئذ كل اشجار الوعر
12நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டுவிருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
13امام الرب لانه جاء. جاء ليدين الارض. يدين المسكونة بالعدل والشعوب بامانته
13அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.