1பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.
1被掳之民向 神的哀求我们曾坐在巴比伦的河畔,在那里我们一想起锡安就哭了。
2அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.
2我们把我们的琴挂在那里的柳树上。
3எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.
3因为在那里,掳掠我们的人要我们唱歌,苦待我们的人要我们娱乐他们;他们说:“为我们唱一首锡安歌吧!”
4கர்த்தரின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?
4我们怎能在异族之地唱耶和华的歌呢?
5எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.
5耶路撒冷啊!如果我忘记你,情愿我的右手忘记技巧(“忘记技巧”或译:“枯干”)。
6நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக.
6如果我不记念你,如果我不高举耶路撒冷超过我最大的喜乐,情愿我的舌头紧贴上膛。
7கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.
7耶和华啊!求你记念以东人在耶路撒冷遭难的日子所行的,他们说:“拆毁它,拆毁它,直拆到根基。”
8பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.
8将要被毁灭的(“将要被毁灭的”有古译本作“毁灭者”)巴比伦城(“城”原文作“女子”)啊!照着你待我们的行为报复你的,那人有福了。
9உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.
9抓住你的婴孩摔在磐石上的,那人有福了。