1உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
1大卫的诗。我要一心称谢你,我要在众神面前歌颂你。(本节在《马索拉抄本》包括细字标题)
2உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
2我要向你的圣殿下拜,我要因你的慈爱和信实称谢你的名;因为你使你的名和应许显为大,超过一切(“因为你使你的名和应许显为大,超过一切”原文作“因为你使你的应许显为大,超过你的一切名字”)。
3நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;
3我呼求的日子,你就应允我;你使我刚强,心里有力。
4கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
4耶和华啊!世上的君王都要称谢你,因为他们听见了你口中的言语。
5கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள்.
5他们要歌颂耶和华的作为,因为耶和华大有荣耀。
6கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
6耶和华虽然高高在上,仍然看顾卑微的人;他却从远处认出骄傲的人。
7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.
7我虽然处身在患难之中,你仍使我存活;我仇敌的怒气,你必伸手抵挡;你的右手必拯救我。
8கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.
8耶和华必成全关乎我的事;耶和华啊!你的慈爱永远长存,求你不要离弃你手所造的。