1கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?
1大卫的诗。耶和华啊!谁能在你的帐幕里寄居?谁能在你的圣山上居住呢?(本节在《马索拉抄本》包括细字标题)
2உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
2就是行为完全,作事公义,心里说诚实话的人。
3அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
3他不以舌头诋毁人,不恶待朋友,也不毁谤他的邻居。
4ஆகாதவன் அவன் பார்வைக்குத் அற்பமானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம் பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.
4他眼中藐视卑鄙的人,却尊重敬畏耶和华的人。他起了誓,纵然自己吃亏,也不更改。
5தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் இலஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
5他不拿自己的银子放债取利,也不收受贿赂陷害无辜;行这些事的人,必永不动摇。