1اذا جلست تاكل مع متسلط فتامل ما هو امامك تاملا
1நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்.
2وضع سكينا لحنجرتك ان كنت شرها.
2நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.
3لا تشته اطايبه لانها خبز اكاذيب.
3அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே.
4لا تتعب لكي تصير غنيا. كف عن فطنتك.
4ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.
5هل تطيّر عينيك نحوه وليس هو. لانه انما يصنع لنفسه اجنحة. كالنسر يطير نحو السماء
5இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோகும்.
6لا تأكل خبز ذي عين شريرة ولا تشته اطايبه.
6வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.
7لانه كما شعر في نفسه هكذا هو. يقول لك كل واشرب وقلبه ليس معك.
7அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.
8اللقمة التي اكلتها تتقيأها وتخسر كلماتك الحلوة.
8நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.
9في اذني جاهل لا تتكلم لانه يحتقر حكمة كلامك.
9மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை பண்ணுவான்.
10لا تنقل التخم القديم ولا تدخل حقول الايتام.
10பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
11لان وليهم قوي. هو يقيم دعواهم عليك
11அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
12وجّه قلبك الى الادب واذنيك الى كلمات المعرفة.
12உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
13لا تمنع التأديب عن الولد لانك ان ضربته بعصا لا يموت.
13பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
14تضربه انت بعصا فتنقذ نفسه من الهاوية.
14நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
15يا ابني ان كان قلبك حكيما يفرح قلبي انا ايضا
15என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும்.
16وتبتهج كليتاي اذا تكلمت شفتاك بالمستقيمات.
16உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும்.
17لا يحسدن قلبك الخاطئين بل كن في مخافة الرب اليوم كله.
17உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
18لانه لا بد من ثواب ورجاؤك لا يخيب.
18நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
19اسمع انت يا ابني وكن حكيما وارشد قلبك في الطريق.
19என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.
20لا تكن بين شريبي الخمر بين المتلفين اجسادهم.
20மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே.
21لان السكير والمسرف يفتقران والنوم يكسو الخرق
21குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.
22اسمع لابيك الذي ولدك ولا تحتقر امك اذا شاخت.
22உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.
23اقتن الحق ولا تبعه والحكمة والادب والفهم.
23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.
24ابو الصدّيق يبتهج ابتهاجا ومن ولد حكيما يسرّ به.
24நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
25يفرح ابوك وامك وتبتهج التي ولدتك.
25உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.
26يا ابني اعطني قلبك ولتلاحظ عيناك طرقي.
26என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.
27لان الزانية هوة عميقة والاجنبية حفرة ضيّقة.
27வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.
28هي ايضا كلص تكمن وتزيد الغادرين بين الناس
28அவள் கொள்ளைக்காரனைப்போல் பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள்.
29لمن الويل لمن الشقاوة لمن المخاصمات لمن الكرب لمن الجروح بلا سبب لمن ازمهرار العينين.
29ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
30للذين يدمنون الخمر الذين يدخلون في طلب الشراب الممزوج.
30மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.
31لا تنظر الى الخمر اذ احمرّت حين تظهر حبابها في الكاس وساغت مرقرقة.
31மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.
32في الآخر تلسع كالحية وتلدغ كالافعوان.
32முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
33عيناك تنظران الاجنبيات وقلبك ينطق بأمور ملتوية.
33உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
34وتكون كمضطجع في قلب البحر او كمضطجع على راس سارية.
34நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.
35يقول ضربوني ولم اتوجع. لقد لكأوني ولم اعرف. متى استيقظ. اعود اطلبها بعد
35என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.