الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

90

1صلاة لموسى رجل الله‎. ‎يا رب ملجأ كنت لنا في دور فدور‎.
1ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.
2‎من قبل ان تولد الجبال او أبدأت الارض والمسكونة منذ الازل الى الابد انت الله‎.
2பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும், உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.
3‎ترجع الانسان الى الغبار وتقول ارجعوا يا بني آدم‎.
3நீர் மனுஷரை நீர்த்துளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறீர்.
4‎لان الف سنة في عينيك مثل يوم امس بعدما عبر وكهزيع من الليل‎.
4உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.
5‎جرفتهم. كسنة يكونون. بالغداة كعشب يزول‎.
5அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டு போகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
6‎بالغداة يزهر فيزول. عند المساء يجزّ فييبس
6அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோகும்.
7لاننا قد فنينا بسخطك وبغضبك ارتعبنا‎.
7நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.
8‎قد جعلت آثامنا امامك خفياتنا في ضوء وجهك‏‎.
8எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
9‎لان كل ايامنا قد انقضت برجزك. افنينا سنينا كقصة‎.
9எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டோம்.
10‎ايام سنينا هي سبعون سنة. وان كانت مع القوة فثمانون سنة وافخرها تعب وبلية. لانها تقرض سريعا فنطير‎.
10எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கரமாய்க் கடந்து போகிறது நாங்களும் பறந்துபோகிறோம்.
11‎من يعرف قوة غضبك. وكخوفك سخطك‎.
11உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படத்தக்க விதமாய் உமது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்?
12‎احصاء ايامنا هكذا علمنا فنؤتى قلب حكمة
12நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.
13ارجع يا رب. حتى متى. وترأف على عبيدك‎.
13கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.
14‎اشبعنا بالغداة من رحمتك فنبتهج ونفرح كل ايامنا‎.
14நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
15‎فرحنا كالايام التي فيها اذللتنا كالسنين التي رأينا فيها شرا
15தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும்.
16ليظهر فعلك لعبيدك وجلالك لبنيهم‎.
16உமது கிரியை உமது ஊழியக்காரருக்கும், உமது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.
17‎ولتكن نعمة الرب الهنا علينا وعمل ايدينا ثبت علينا وعمل ايدينا ثبته
17எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள் மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.