الكتاب المقدس (Van Dyke)

Tamil

Psalms

91

1الساكن في ستر العلي في ظل القدير يبيت
1உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
2اقول للرب ملجإي وحصني الهي فاتكل عليه‎.
2நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
3‎لانه ينجيك من فخ الصياد ومن الوبإ الخطر‎.
3அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார்.
4‎بخوافيه يظللك وتحت اجنحته تحتمي. ترس ومجن حقه‎.
4அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.
5‎لا تخشى من خوف الليل ولا من سهم يطير في النهار‎.
5இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,
6‎ولا من وبإ يسلك في الدجى ولا من هلاك يفسد في الظهيرة‎.
6இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
7‎يسقط عن جانبك الف وربوات عن يمينك. اليك لا يقرب‎.
7உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.
8‎انما بعينيك تنظر وترى مجازاة الاشرار
8உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.
9لانك قلت انت يا رب ملجإي. جعلت العلي مسكنك‎.
9எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.
10‎لا يلاقيك شر ولا تدنو ضربة من خيمتك‎.
10ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
11‎لانه يوصي ملائكته بك لكي يحفظوك في كل طرقك‎.
11உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
12‎على الايدي يحملونك لئلا تصدم بحجر رجلك‎.
12உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.
13‎على الاسد والصل تطأ. الشبل والثعبان تدوس‎.
13சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்.
14‎لانه تعلق بي انجيه. ارفعه لانه عرف اسمي‎.
14அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.
15‎يدعوني فاستجيب له. معه انا في الضيق. انقذه وامجده‎.
15அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
16‎من طول الايام اشبعه واريه خلاصي
16நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என், இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.