1இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
1大卫的诗。我要歌唱慈爱和公正;耶和华啊!我要向你歌颂。(本节在《马索拉抄本》包括细字标题)
2உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
2我要小心谨慎行正直的路;你什么时候才到我这里来呢?我要在我的家中,以正直的心行事。
3தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.
3邪恶的事,我都不摆在眼前;离开正路的人所作的事,我都恨恶,决不容这些沾染我。
4மாறுபாடான இருதயம் என்னை விட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன்.
4狡诈的心思,我要远离;邪恶的事,我不参与。
5பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.
5暗中诽谤邻舍的,我必把他灭绝;眼目高傲,心里骄横的,我必不容忍他。
6தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.
6我的眼目必看顾国中的诚实人,使他们与我同住;行为正直的,必要侍候我。
7கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.
7行诡诈的,必不得住在我的家里;说谎话的,必不能在我眼前坚立。
8அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.
8我每日早晨必灭绝国中所有的恶人,好把所有作孽的人都从耶和华的城里剪除。